Skip to main content

Posts

Showing posts from February, 2019

மார்க்வெஸ்ஸின் லஜ்ஜையற்ற கண்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு , காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘ லவ் இன் தி டைம் ஆஃப் காலரா ’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல் . கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது . காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை , ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது . காதலில் இருக்கும் , காதல்கொள்ளப்போகும் ஆண் , பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது . இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது . ‘ அது தவிர்க்க முடியாதது : கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும் .’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல் . நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்

ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம் ஆத்மாநாம் எழுதிய   ‘ பிச்சை ’   எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல் ,   தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து ,   கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில். பிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்

ப்ரவுனிக்குச் சில கவிதைகள்

பளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது. -          ஒரு ஹைகூ கவிதை ஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால் அழைக்கிறது எல்லையற்று விளையாட. விளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை விளையாடு இலக்கை மறந்து இலக்கையே விளையாட்டாக்கி விளையாடு விளையாடும் வரை மரணமில்லை. விளையாடு உலகத்தைப் பந்தாக்கி உன்னையே பந்தாகப் பாவித்து விளையாடு பால்கனி முற்றம் சிறை   மதிலோரம் படுக்கையறை சடலக்கூடம் பேதமற்று விளையாடு சின்னது பெரியது காற்று போனது எல்லாவற்றுக்கும் உயிர்கொடுத்து விளையாடு இறந்த பந்தென்ற ஒன்று இல்லை எலும்பு உடையாது உயிர்போகாது அனுமன் போல எத்தனை உயரமென்றாலும் குதி பற உடல் காற்றாக மாற மனத்தை உருட்டி விளையாடு உன் இதயம் நாக்காகட்டும் வெளியே காட்டு தப்பொன்றுமில்லை தேகம் உலை போல் எரிந்து விசிலென இரையட்டும் விளையாடு 000 உனது குரைப்பு இன்னும் ப