Skip to main content

Posts

Showing posts from July, 2018

புவியரசு நேர்காணல் தாஸ்தாயெவ்ஸ்கி கொடுத்த ஞானம் அது

ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதையை ஜனநாயகப்படுத்திய வானம்பாடி இதழின் தாய்ப்பறவை கவிஞர் புவியரசு. ‘தேடாதே தொலைந்து போவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று நம்பிக்கையின்மை தொனிக்க கவிதை எழுதியவர், வாழ்க்கை முழுக்க கவிதை, அரசியல், மெய்யியல், சினிமா, வாசிப்பு எனத் தேடலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். ஓஷோ முதல் சுந்தர ராமசாமி வரை வியந்த படைப்பான தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை மொழிபெயர்த்தது இவருடைய வாழ்நாள் சாதனை. கோவையில் அவரது இல்லத்தில் கவிஞர் இசையுடன் சந்தித்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது… வானம்பாடி இயக்கமும், கவிதை இதழும் தோன்றிய கதையைச் சொல்லுங்கள்? வானம்பாடி இதழ் 1970-களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சர்வதேச ரீதியாக, அனைத்து நாடுகளிலுமுள்ள மக்கள், கொந்தளிப்போடும் அரசியல் சொரணையோடும் எழுந்த புரட்சிகரமான காலகட்டம் அது. பருவநிலைகள் எல்லாரையும் கிளப்பிவிட்டு விட்டதா, பூமிக்குக் கீழே எரிமலைகள் கொந்தளித்தது காரணமா என்று தெரியவில்லை. பிரான்சில் மாணவர் புரட்சி வெடித்ததற்குப் பின்னான மனநிலையென்று சொல்லலாம். அப்துல் ரகுமான் மாதிரி நாங்களும் அப்போது பெர

இதயத்தின் ஆழத்தில் ஆசை

மார்டின் பட்லர்  ( போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu   என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அ

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி

ஷங்கர்ராமசுப்ரமணியன் தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த அவர் 6.1.1997இல் வேலூர் அருகே கரடிக்குடியில் காலமானார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் தோன்றிய மகத்தான ஆளுமை. சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்! சித்தர் இங்கு இருந்தபோது பித்தர் என்று எண்ணுவீர். - சிவவாக்கியர் பாடல் 20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர் பிரமிள். அவர் வாழும் காலத்திலும், அவர் மறைந்த பிறகும் அவரது சாதனைகள் தீவிர வாசகர்களால்கூட அதிகம் உணரப்படாத நிலையே இங்குள்ளது. தமிழ்ப் புதுக்கவிதை இயக்கம், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., வல்லிக்கண்ணன் போன்ற உரைநடைக்காரர்களால் மந்தமாகவும் விசாரத்தன்மையுடனும், பழைமையை மு

காலியாக இருப்பதன் பெறுமானம் - நித்ய சைதன்ய யதி

எனது இடது கையில் சூடான தேநீர்க் கோப்பையுடன் அமர்ந்திருக்கிறேன். அதைஉடனடியாகக் குடிக்க முடியாது. அது சூடாக இருப்பதால் நான் காத்திருக்க வேண்டும். எனக்கு முன்னால் கத்தி, ஸ்பூனுடன் பனானா ப்ரெட் சிலைஸ்களும் வைக்கப்பட்டுள்ளன.   நண்பர்கள் வருகைக்காகக் காத்திருப்பதால் அதுவும் வெட்டப்படாமல் இருந்தது. எனது வலது பக்கத்தில் சீனக் கைவினைஞர்களால் செய்யப்பட்ட அழகிய கைப்பிடியுள்ள கூடைஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது காலியாக இருந்தது. அந்தக் கூடையின் பூர்விகமும், வெறுமையாக இருப்பதன் பெறுமானம் வலியுறுத்தப்படும் தாவோயிச தத்துவமும் சேர்த்து என்னை தேநீரிடமிருந்தும் ரொட்டியிடமிருந்தும் சற்று எட்டியிருக்கச் செய்திருந்தன. அந்த ஆதியான வெறுமை நிலைக்குள், பிரபஞ்சங்கள் சுற்றிச் சுற்றி வந்து போய்க்கொண்டிருந்தாலும் அது நிரப்பப்படுவது தொடர்கிறது. எனது மடியில் மூக்குக் கண்ணாடி இருந்தது. நான் கண்களை மூடி அமர்ந்திருப்பதால் அதனால் இப்போதைக்குப் பயன் இல்லை. இங்கேஇருக்கும் பொருட்கள் மீது எனக்கு கவனம் இல்லை; இங்கு இல்லாதவை மீதுதான் இத்தருணத்தில் என் பிரதான கவனம் இருக்கிறது. இதுவும் ஒரு முரண்பாடுதான். இதைக் குற

காதலர் நேசிக்கப்படுபவரும்தான் - நித்ய சைதன்ய யதி

ஒ ரு உண்மையான காதலர், நேசிக்கப்படுபவரும்தான். காதலரும் காதலிக்கப்படுபவரும் இரு வேறு நபர்களல்ல. இரண்டுமே மாறக்கூடிய பதங்கள்தாம். உரிமை அல்லது ஒப்புக்கொடுக்கும் அகந்தையை அகற்றும் தெய்வீக நிலையால் அவனும் அவளும் அங்கே நெகிழ்ந்திருப்பவர்கள். அங்கே உங்களை நீங்கள் அடிமையாக ஒப்புக்கொடுக்கவில்லை, ஒரு உறுதிமொழியாக உங்களையே அளிக்கிறீர்கள். நீங்கள் நேசிப்பவருக்கு உங்களையே தருவதில் மிகப்பெரும் ஆனந்தம் உள்ளது. அப்படியாக பரஸ்பரம் அத்தனை இயற்கையோடு அத்தனை சந்தோஷத்துடன் இன்னொருவருக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் சிறுதுளி கூட படியாமல் நீங்கள் வழங்கிக்கொள்கிறீர்கள். அதேவேளையில், உங்களுக்கு உதவி செய்வதற்கும் பகிர்வதற்கும் சேவை செய்வதற்குமான வாய்ப்பும் வழங்கப்படுவதற்கான கவுரவத்தையும் உணர்கிறீர்கள். இந்தக் கொடுக்கல் வாங்கலில் மேல், கீழ் என்ற நிலை இல்லை. ஆசீர்வாதம் கொடுப்பதைப் போன்றே ஆசீர்வாதம் பெறுவதும் மகத்தானது. இந்த அடிப்படையில் தோழமை வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ளும்போது காதலை வெளிப்படுத்தும் சாத்தியமும் மேலும் விஸ்தீரணமாகிறது. நாம் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது, நம்மைச் சுற

மனம் மனம் மனம் முயல் முயல் முயல்

ஞாயிற்றுக்கிழமையொன்றின் இந்தக் காலைவேளை சந்தோஷம் துக்கம் இரண்டு சாத்தியப் பாதைகளை ஒளியோடு எனக்கு அருளியுள்ளதாக மனம் சொன்னது இரண்டு பாதைகளில் ஒன்றை நானே தேர்ந்தெடுக்க கடவுளால் வழங்கப்பட்டிருந்த பளபளப்பான மெனு கார்ட் அது. Y – யின் முனை   போன்ற நிழல் சாலை அதில் இறங்கி நடந்தேன் விழும்போது வடிவம் மாறும் சரக்கொன்றை மரத்துக்குக் கீழே ஒரு முயல் பொம்மையைப் பார்த்தேன் காதுகள் உயர்ந்த கண்கள் சிரிக்கும் இரண்டு முன்பற்கள் வெளித் தெரியும் விரலளவே உடல் கொண்ட சாம்பல் நீல பிளாஸ்டிக் முயல் அது. அதன் இடது கன்னத்திலும் வலது கண்ணுக்கு மேலும் இடது முட்டியிலும் வட்டம் செவ்வகம் சதுரத்தில் பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்டிருந்தன பிளாஸ்திரிகளை அனிச்சையாக உரிக்கத் துவங்கினேன் அப்போதுதான் உரைத்தது அந்தப் பிளாஸ்திரிகளும் முயலின் அங்கம்தான் உரிக்காமல் விட்ட பிளாஸ்திரிகளுடன் முயலைப் பார்த்தேன் அது காயம்பட்ட முயல் அதில் காயம்பட்ட என்னைப் பார்த்தேன் எனது பிளாஸ்திரிகளைப் பார்த்தேன் அவனுக்குக் காயம்பட்ட முயல் வீரன் என்று பெயர் வைத்தேன் எனது சட்டைப்