Skip to main content

டானடா சண்டூகா ஜென் கவிதைகள்




மலைகள் எதிர்பட்டால் மலைகளைப் பார்ப்பேன்

மலைகள் எதிர்பட்டால்,

நான் மலைகளைப் பார்ப்பேன்

மழை நாட்களில்

நான் மழைக்கு செவிசாய்ப்பேன்.

இலையுதிர் காலம், வேனில் காலம்,

மழைக் காலம், குளிர் காலமென்றாலும்.

நாளையும் நன்றாகவே இருக்கும்.

இன்றிரவும் நன்றாகவே இருக்கும்.


உள்ளது உள்ளபடி


உள்ளது உள்ளபடி

மழை பெய்யும்போது, நான் ஈரமாகிறேன்,

நான் நடக்கிறேன்.

எத்தனையளவு உள்ளே போகிறேனோ

எத்தனையளவு உள்ளே போகிறேனோ

அத்தனை பசுமை மலைகள்


எனது பிச்சைப் பாத்திரம்


எனது பிச்சைப் பாத்திரம்

ஏற்கிறது உதிர்ந்து விழுந்த இலைகளை.

 


Comments