Skip to main content

மாறும் நிலங்களை மொழிபெயர்க்கும் கவிஞன்



சிறுவயதிலேயே வால்கா முதல் கங்கை வரை’ நூலைப் படித்துவிட்டு உற்பத்தி உறவுகளின் கதையாக இந்த உலகத்தின் கதையை வாசிக்கத் தெரிந்த இந்தியதமிழ் குடியானவன்.

யவனிகா என்று இவர் வைத்த பெயர் எழுத்தாளர் சுஜாதா நாவலின் பெயராக பின்னால் ஆனது. 1990-களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத்தொழிலை இழந்தவர்களில் ஒருவர். தலித் அரசியல்தலித் இலக்கியம்சோவியத் உடைவுக்குப் பின் மார்க்சியம் சந்தித்த நெருக்கடிபின் நவீனத்துவ,அமைப்பியல் கோட்பாட்டு விவாதங்களும் இவரது கவிதையில் கதைகளாககதாபாத்திரங்களாககுழந்தைகள் விளையாடும் கூழாங்கற்களைப் போல உருளுகின்றன.

வியாபாரத்துக்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அலையத் தொடங்கியபோது இவரது கவிதைகளில் மாறும் நிலங்கள்தாவரங்கள் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும். சிறு துணி வணிகனாக கிழக்கு ஆசிய நாடுகளிலும் பயணம் செய்யத் தொடங்கியபோதுஒரு புதிய வர்த்தகக் காலனியாக உருவாகி மேல்கீழாக மாறப்போகும் இந்தியாவின் நிலங்களை மனிதர்களை தீர்க்க தரிசனமாகப் பார்த்துவிட்டான் யவனிகா. அப்படியாக ஊகித்து உணர்ந்த அவனது கவிதைகளின் முதல் தொகுதிதான் இரவு என்பது உறங்க அல்ல’. இரவு என்பது வேறு எதற்கு என்று கவிதை ஆசிரியனிடமே கிண்டலாகக் கேட்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. புலம்பெயர் தொழிலாளர்களுக்கும்அயல்பணிதகவல் தொழில்நுட்ப ஊழியம் செய்பவர்களுக்கும்காதலர்களுக்கும்பெருகிவரும் மன அழுத்தக்காரர்களுக்கும் இரவு என்பது உறங்க அல்ல என்பது இன்றைய எதார்த்தமாக ஆகியிருக்கிறது.     

 உணவுஉடைகள்உழைப்புஉற்பத்தி உறவுகள்காதல்இனவிருத்திஅரசுநிர்வாகம்நியமங்கள் எல்லாமே மாறிமுயங்கி,கலந்து கொண்டிருக்கும் மனநில வரைபடம் நம்முடையது. ஒரு தங்க நாற்கரச் சாலையின் வருகையால் தொலைந்து போன கிராமத்தைத் தேடிப் போகும் பேருந்தை நாம் யவனிகாவின் கவிதைகளில் பார்க்கிறோம். ஒரு கிழக்காசிய சிறு நகரத்தின் சாயலைதனது சொந்த ஊரான சின்னாளப்பட்டிக்கு தன் மொழியால் ஏற்றிவிடுகிறார். பிரம்மபுத்ராவின் பள்ளத்தாக்குகளில் இயற்கையும் சாவகாசமும்  அமைதியும் பால்புகட்டி வளர்த்த ஒரு இளைஞனை சென்னையின் தகரக் கொட்டடிக்குள் 72 மணி நேரங்களில் துப்பி உருளைக்கிழங்கு தின்னும் கட்டிடத் தொழில் எந்திரமாகத் துப்பும் எதார்த்தம்தானே நம்முடையது. “ யாரின் தூக்கத்திலிருந்து விடிகிறது இந்த அதிகாலைச் சூரியன்/மாலுமிகளிடம் கட்டணம் செலுத்தி/ எந்தக் கரைகளில் இறக்கிவிடப்படுகிறது பல நூற்றாண்டுத் துயரம்”(தெய்வங்களில் படியும் உப்புக்காற்று- பக்கம் 241) என்று எழுதுகிறார்.

இங்கே தான் யவனிகாநிலங்களையும் மனிதர்களையும் அவர்களது துயரங்களையும் காதலையும்பாடலையும் தண்ணீரில் தெரியும் பிம்பங்களைப் போல கொஞ்சம் திசை மாற்றி விடுகிறார். ஒரு நாகரிகத்தின் கரையில் அமர்ந்து கொண்டு மாற்றங்களால் பறிக்கப்பட்டதுக்கித்த,வலித்த நரையேறிய உடலைக் கொண்ட ஒரு நாடோடியின்தோல்வியுற்ற பௌராணிகனின் பாடல் என்று இந்தக் கவிதைகளைச் சொல்லலாம்.

யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளில் வரும் கடவுள் சம்பிரதாயமான உருவம் அல்லர்இருந்ததாக நம்பப்படும் ஒரு ஒழுங்கின் இயற்கையின் முதிர்ந்த, தன்னைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத கதாபாத்திரம் தான் அவர். யவனிகா கடவுளின் இடத்தில் கோட்பாட்டையும் கார்ல் மார்க்சையும் வைக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளாக நவீன தமிழ் கவிதைகளில் புழங்கப்படும் கடவுளை யவனிகா தான் முன்நிர்ணயம் செய்கிறார். அப்படிப் பார்க்கையில் யவனிகாவும் கடவுள் நம்பிக்கையாளன் தான். சொர்க்கமாய் இல்லாத ஒன்றைக் கடவுள் படைக்கும் திறன் பெற்றிருந்தார் என யவனிகாவும் நம்பியிருக்கவில்லை என்பது அவன் கவிதைகளில் தொனிக்கும் மன்றாடலிலிருந்து தெரியவருகிறது. வரலாற்றின் பெருஞ்சுமையை தான் மட்டுமே சுமக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரக்ஞையும் பிரமையும் கற்பிதமும் கொண்ட மனித உயிர்களின் பிரதிநிதியாக கார்ல் மார்க்சைக் காண்கிறார் யவனிகா. ஒரு மனித உயிரின் ஞாபகம்’ கவிதை மார்க்சியர்களால் கொண்டாப்பட வேண்டிய கவிதையாகும்.

90-களுக்கு முன்னர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைக்கும் 90-களுக்குப் பிறகு நவீன கவிதை என்று சொல்லத் தொடங்கப்பட்டதற்கு உள்ளடக்கம்,பண்பு ரீதியான வித்தியாசம் உள்ளதாஅதற்கான பதிலை யவனிகா ஸ்ரீராம் கவிதைகளின் வாயிலாகப் தெரிந்துகொள்வது கூடுதல் அனுகூலமானது. புதுக்கவிதைகள் அத்வைத நோக்கும் அதன் அம்சங்களான தன் விசாரணையையும்சலிக்கும் பண்பையும் கொண்டவை என்று கூறமுடியும். இருமைபன்மைபெருக்கம் என்ற கூறுகளைப் பெறுகின்றன. அங்குதான் பெண்ணரசிகள் கவிதைகள் எழுதுகிறார்கள். கவிதையே வாளாகட்டும் என்ற லட்சியத்துடன் தலித் அரசியல் கவிதைகள் பிறக்கின்றன. ஒரு புனைகதையின் இடுபொருட்களையும் அழகியலையும் சேர்த்து நவீன கவிதை தோற்றம் கொள்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள்பாலூட்டிகள்மெல்லுடலிகள்,வெவ்வேறு மனநிலப் பிரதேசத்து மனிதர்கள்,உணர்வுநிலைகள்பால்நிலைகள்பாலியல்பு நிலைகள் என பல்லுயிர்கள் வாழும் பிரபஞ்சமாக யவனிகாவின் கவிதைகள் துடித்துக் கொண்டிருக்கின்றனநவீன கவிதைபொருட்களுக்கும் உயிரையும் உணர்வையும்  கொடுத்துவிட்டது.

உடலின் துக்கத்தை மட்டுமல்ல மனத்தின் வலியையும் உடல்தான் இங்கே சுமக்கிறது. ஒளிரும் நகரங்களின் முன்னிரவில் ஒரு மீமெய்மை நிலையை உணர்வது போலநவீன கவிஞர்கள் உடல்வழியாகவே மீமெய்மைத் தன்மையை அடைகிறார்கள். அங்கே உழைப்பதும்விழித்திருப்பதும்கனவு காண்பதும்காதலிப்பதும்நோய்ப்படுவதும் உடல்தான். நினைவுகளையும் லட்சியங்களையும் சுமப்பது உடல்தான்உடல் தான்.

000

வலியும் சந்தோஷமும் கொண்ட எந்திரமாக மனிதனைப் பாடுவதைப் போலவே இயற்கையையும் எந்திரமாகவே பாவிக்கிறார் யவனிகா. இயற்கையை தனி வாழ்வு கொண்ட ஒன்றாகவோ நிர்க்குணத்துடனோ அழகுடனுமோ பார்ப்பதில்லை. விவரணைகள் சலிப்புறும் போது சொல்லப்படும் நிலம் காட்சியாகாமல் மலட்டுச் சோர்வையும் தருகின்றன. அனைத்து வலிகளுடனும் நினைவின் சுமைகளுடனும் ஏமாற்றத்தின் முனைகளில் வாழ்ந்து தீர்க்கும் மானுட உயிர்களுக்கு போதையும் காமமும் மட்டுமே தப்பிக்கும் வழிகளாக இவர் உலகத்தில் உள்ளன. ஆனால் உபரிச்சந்தையின் விலைவாசி வரைபடத்தில் போதை எளிதில் வாங்கப்படக் கூடியதாகவும் காமம் விலை மிகுந்ததாகவும் உள்ளதையும் தீராமல் சொல்கின்றன யவனிகாவின் கவிதைகள் கூடவே சொல்கின்றன.

பெண்ணுடன் பேசஉறவு கொள்வற்கான விழைவோடு பெண்ணாகவே ஆகும் விழைவு இவர் கவிதைகளில் புதிய தன்மையாக உள்ளது. உலகம் மாறுவதை பெண்களின்பாலியல் நடத்தைகளின் மாறுதல் வழியாக பயத்துடன் இந்தக் கவிதைகள் காண்கின்றன.
இயற்கையை நிர்க்குணத்துடன் ஒரு விவசாயியால் பார்க்க முடியாது போலும். பெண்களையும் காமத்தையும் பயங்கரத் தன்மையின்றி இந்த இந்திய தமிழ் கிராமத்துக் கவிதை சொல்லியால் பார்க்க முடியாதா யவனிகா? என்றும் கேட்கத் தோன்றுகிறது. அதேவேளையில் ஒடுக்கியவர்களையும் பழிதீர்க்கக் குறிபார்த்துக் கொண்டிருக்கும் ஒரு காலத்தின் வருகையை ஏற்கவும் செய்கிறது. (என்னைப் பொய்யனாக்கும் நிகழ்விற்கிடையேஒரு நாளை அடையாளம் காட்டி இறகுகள்விட்டுப் போன ஈசலாய் மட்டும் இருக்கச் சம்மதம்/ நண்பா சாக்கடைகளைத் திறப்பவனிடம் இனியாவது பேசு/ பெண்களிடத்து இருக்கலாம் பூமியின் மீதிச் சுற்று)

உயிரை நீட்டித்து வைத்திருக்க நப்பாசையாக ஒரு ராத்தல் மைதாமாவைக் கூட வாங்குவதற்கு ஏலாத ஓட்டை நாணயங்களாக உடல்பையில் கிணுகிணுக்கிறது காம்ம். அது ஒன்றே ஆறுதலாக கனவாக அவனது கவிதைப் பிரபஞ்சத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உள்ளது. (இந்நாட்களில் ஒருவனைகாதல் மட்டுமே அர்த்தப்படுத்திவிடக்கூடும்/ மேலும் ஒரு பெண்ணின் தேர்வுதான்இந்நகரத்தின் அலங்காரமும் கூட)

அறிவின் நம்பிக்கையில் எழுந்து அறிவின் பயனின்மையைப் பாடுவதுகருத்தியல் நம்பிக்கையுடன் மேலே போய்,கருத்தியலின் தோல்வியைப் பாடுவதுகோட்பாட்டின் பாட்டையில் பயணித்து கோட்பாட்டின் வியர்த்தத்தை எழுதுவது;உடலின் விடுதலையில் தற்காலிகமாகச் சுகித்து உடலின் எல்லைக்குள் துக்கித்துப் பகிர்வதுஎன்று இவன் கவிதைகளின் எழுதல்பறத்தல்அமர்தல் அமைகிறது.

புறாவின் அழுகை போலத் தொனிக்கும் ஒப்பாரித் தன்மைபெண்ணின் குத்தல் தொனிக்கும் சாடைப் பேச்சு, வக்கணை, முச்சந்தியில் நின்று சாபமிடும் பைத்தியத்தின் உளறல்காதலின் களி உரையாடல்நடு இரவில் குறிசொல்பவனின் தரிசனம்வரலாற்றையும் தத்துவத்தையும் இடைவெட்டி உரைக்கும் கதை சொல்லி என்ற வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறது யவனிகாவின் கவிதைகள்.  சாண்டில்யன்ஞானக்கூத்தன்,ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்கோட்பாட்டு கட்டுரைகளிலிருந்து யவனிகா ஸ்ரீராம்மரபற்றதும் அந்நியமானதாகவும் தோற்றமளிக்கும் ஒருவகை கவிதை மொழியை உருவாக்கியிருக்கிறார். யவனிகாவின் கவிதைகள் போர்ஹே உருவாக்காமல் போன கற்பனை விலங்குகளின் உடலை ஒத்தனவாக உள்ளன. பல கலாசார அடையாளங்கள்கோட்பாடுகள்கதைகள்குழந்தைகளின் சொலவடைகள் ஒட்டிப்பிறந்த உலகளாவிய தன்மை கொண்ட உயிர்கள் அவை. தமிழ் பண்பாட்டுக்கு நெருக்கமான ஒரு அனுபவத்தைக்கூடஉலகின் வேறு விளிம்பில் உள்ள குடிமகன் ஒருவனுக்கு நடப்பதாகவேறொரு காலநிலவாழ்வுப்புலத்தில் பேசும் அந்நிய பாவத்தை’ ஏற்படுத்தி விடுகிறார் யவனிகா. ஒரு நாவலின் பகுதிகளாக, இந்த மொத்தத் தொகுதியின் 256 கவிதைகளையும் வாசிக்க முடியும்.

  

தலைமறைவுக் காலம்’ கவிதைத் தொகுப்பில் ஒளி எழுப்பும் தேசம்’ கவிதையில் யுகங்களுக்கிடையே ஓடும் பேருந்தில் தேசத்தின் நீதிவாசகம் எழுதப்பட்டுள்ளது. அந்த நீதிவாசகத்தை நாம் திருக்குறளாகவும்அந்தப் பேருந்தை திருவள்ளுவராகவும் படிக்கலாம் யவனிகா. பூர்வ நிலத்திலிருந்து வெளியேறி நினைவுகளைக் கந்தல் பையாகச் சோகத்துடன் எங்கோ ஒரு அந்நிய நிலத்தில் சுமந்து திரியும் மூன்றாம் உலக அரசியல் உயிரியின் பாடல்கள் இவை. 



சிவந்த அபிப்ராயங்களோடு மூலவிரோதம் எதுவும் இல்லை என்று கூறும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம், பீடித் தொழிலாளர்களுக்கு தன் கவிதை ஈடாகாது என்றும் தெரிந்து வைத்திருக்கிறார்.  சமகால நிலைமைகள் மீதான சிறந்த இடையீடாக ஆகியிருக்கும் சிறந்த கவிதைகளென ஒரு பட்டியலை ஒவ்வொரு வாசகரும் பராமரிக்கலாம். (ஆசியப் பகுதியில் வசிப்பது, ஏறத்தாழ நரேன் சொன்ன கதை, புல் தைலம், நமது பார்வையாளர், பறக்கும் கம்பளம், தேய்ந்த ஆசாமி, அபிப்ராயங்கள், வாசனைத் திரவியம் தயாரிக்கும் வழிகள், சொல்வது நமது ஆனந்த், ஆறுமுகா காபி ஒர்க்ஸ், ஒரு மனித ஞாபகம், உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது). இறகுகளைக் கொண்டதும் புனிதமானதும் இலேசானதுமான வஸ்து என்று கவிதையை வரையறுக்கிறார் ப்ளேட்டோ. யவனிகாவின் கவிதைகளை முன்வைத்து இறகுகளைக் கொண்ட புனிதம் துறந்த பொறுப்புகள் கனக்கும் வஸ்து என்று நான் சொல்கிறேன். அவர் இறந்த மண்டையோட்டின் பல்வலி என்றும் வரலாற்றிலிருந்து தானியக்கூடங்களைப் பாதுகாக்கும் செயல்பாடு என்றும் வரையறுக்கிறார்.

முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டுவிட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிடுங்கி எறியப்பட்ட மக்கள் உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் காலம் இது. அந்த நிலைமைகளை கவிஞன் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்க தரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்சியக் கவிஞன் யாருமில்லை. அவரது கவிதைகளுக்கு நகல் கவிஞர்களும் உருவாகிப் புகழ்பெற்றுவிட்டனர். ஆனால் இதுவரை அவரை நமது தமிழ் மார்க்சியர்கள் திரும்பிக்கூடப் பார்க்காதது அப்படி ஒன்றும் ஆச்சரியப்பட முடியாத நிகழ்வுதான். நம் தோழர்கள் எந்தப் பெருநிகழ்வையும் ஜமுக்காளத்தால் மூடி மௌனமாகக் கடந்துவிடுவதில் வல்லவர்கள்.

Comments