முயல்களிலேயே
சின்னஞ்சிறிய முயலை
ரமணர் வளர்த்தார்.
ஒரே ஒரு
புகைப்படத்தில்
அவருடைய பிருஷ்ட
மெத்தைக்கருகில் அமர்ந்து
கம்பீரமாக முகம்
காட்டி
காதுகளை உயர்த்தி
வரலாற்றில்
இடம்பெற்று விட்டது.
சிறுவன் வெங்கட்ராமனை
அதற்குத் தெரியுமாம்
அந்த முயலின் கண்கள்
சொல்கின்றன.
Comments