Skip to main content

ரமணர் வளர்த்த முயல்




முயல்களிலேயே சின்னஞ்சிறிய முயலை

ரமணர் வளர்த்தார்.

ஒரே ஒரு புகைப்படத்தில்

அவருடைய பிருஷ்ட மெத்தைக்கருகில் அமர்ந்து

கம்பீரமாக முகம் காட்டி

காதுகளை உயர்த்தி

வரலாற்றில் இடம்பெற்று விட்டது.

சிறுவன் வெங்கட்ராமனை அதற்குத் தெரியுமாம்

அந்த முயலின் கண்கள் சொல்கின்றன.



Comments