Skip to main content

Posts

Showing posts from February, 2017

பிரம்மத்தின் சத்தம்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு வெதுவெதுப்பான உலர்ந்த பீங்கான் கோப்பையாக உணவுத்தட்டாக மேஜையில் இருக்கிறேன் அன்னம் பரிபாலிக்கப்படும் கறியும் குழம்பும் ஊற்றப்படும். இந்தப் பின்மதியத்தில் உழைத்துக் களைத்து பசியோடு உணவகத்தின் ஓர் ஓர நாற்காலியில் அமர்ந்து அவன் உண்டு சவைக்கும் சத்தம் இவ்வுலகின் ஆதிதாளம். பிரம்மமும் அவனும் பரஸ்பரம் முயங்கும் பரஸ்பரம் உண்டு விண்ணும் ஒலியோடு என்னையும் இணைத்துக் கொண்ட அந்தப் பீங்கான் பாத்திரங்கள் தாம் நான்.

(நகுலன்) இல்லாமல் இருப்பதன் இனிமை

 ஷங்கர்ராமசுப்ரமணியன் அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன; ஒரு பொருள் இன்னொரு பொருளாகிறது; ஒரு உயிர் இன்னொரு உயிராக மயங்குகிறது; உயிர் உயிரற்றது என்று சொல்லப்படும் எல்லைகள் குழம்புகின்றன; பொழுதுகளும் பருவங்களும் மயங்குகின்றன; உரையாடலின்போது தனித்தனிச் சுயங்கள் கரைகின்றன. தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் இந்த உருமாற்றங்களையும் மயக்கத்தையும் ஒரு ‘சொரூப’ நிலையாகத் தன் கவிதைகளிலும் உரைநடையிலும் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறார். இயற்கையும் மனிதனும் வேறு வேறு என்று நவீன மனிதன் பாவிக்கிறான். ‘சுயம்’ என்றும் ‘தான்’ என்றும் தனித்து அவன் கொள்ளும் லட்சியங்களும் கனவுகளும் கனத்துச் சலிக்கின்றன. இதைத் தன் படைப்புகளில் தொடர்ந்து தெரியப்படுத்தியவர் நகுலன். தந்தை, அதிகாரி, கணவன், வியாபாரி, நிர்வாகி, ஆட்சியாளன் என லௌகீக வாழ்வில் தான் வகிக்கும் பாத்திரங்களையே திடமான சுயங்களாக வரித்துக்கொள்ளும் மனிதன், அவற்றாலேயே விழுங்கப்படுகிறான். இதை மனித உயிரின் தோல்வியாகப் பார்க்கிறார் நகுலன். இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது எல்லாம் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. முந்தைய உருவை இல்ல

(ராம் கோபால் வர்மா) சைக்கோவுக்கு 50 வயது

 தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் 1960 க்கு முன்பு ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ வெளிவரும்வரை யாரும் குளியலறை ஷவரில் குளிப்பதற்கு அச்சப்பட்டிருக்கவே மாட்டார்கள். அன்றாட குளியல் சடங்கை, கொலைக்கான, சரியான பின்னணியாக சைக்கோ திரைப்படம் மாற்றியது. அந்த திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், அதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களை நாம் பார்த்துவிட்டாலும் ஒவ்வொரு சினிமா ரசிகனின் பிரக்ஞையிலும் சைக்கோவின் தாக்கம் இன்னும் மறையாமல் இருக்கிறது. சைக்கோ திரைப்படம் பற்றிய எனது முதல் நினைவு இதுதான். வீட்டிலும் பள்ளியிலும் நான் செல்லும் அனைத்து இடங்களிலும் சைக்கோ பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்திரைப்படம் பார்த்த கிளர்ச்சியுடன், யாருக்காவது தனியாகப் பார்ப்பதற்கு துணிச்சல் உண்டா என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர்.  சைக்கோ வெளிவந்து 22 வருடங்களுக்குப் பிறகு சைக்கோவின் இரண்டாம் பாகத்திற்கான சுவரொட்டியைப் பார்த்தேன். அந்த சுவரோட்டியில் சைக்கோவில் வரும் வீடு ஒளிநிழலில் இருக்குமாறு  அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தலைப்பின் கீழ் துணைத்தலைப்பாக, "22 வருடங்