Skip to main content

Posts

Showing posts from August, 2016

இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீநேசன்

      ஷங்கர்ராமசுப்ரமணியன்   தமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லலாம். அவர் எழுதிய விஷ்ணுபுரத்திற்குப் பிறகுதான், தமிழ் நாவலாசிரியர்களுக்கான காகிதக் கொள்முதல் கூடியது. சுந்தர ராமசாமி, தனது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை, வீட்டின் எடைத்தராசில் வைத்து திரும்பத்திரும்ப நிறுத்துப் பார்த்து, விஷ்ணுபுரத்தை விடக் கூடுதலாக ஐம்பது கிராம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  தமிழ் நவீன இலக்கியத்திற்குள் வரும் எழுத்தாளச் சிறுவர்கள், ஆயிரம் பக்கத்தில் ஒரு ஐநூறு வருட வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்லத் தொடங்கினர். வாழ்நாள் முழுக்க எழுதியிருந்தாலும் முன்னூறு பக்கத்தைத் தாண்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வருடம் தோறும் ஸ்பைனாக் சாப்பிட்டு பத்து பத்து என்று பஸ்கி எடுக்க வேண்டியிருந்தது. ‘முடியலை’ என்று எழுத்தாளர்கள் தனியறையில் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.      

லீனா மணிமேகலை : நிலங்கள் மீது நீந்திக்கடக்கும் சிச்சிலி

 ஷங்கர்ராமசுப்ரமணியன் சுதந்திரம், பாவனை, சாகசவிழைவு, வெளிப்படையான தன்முனைப்பு, திமிறல், முரண்பாடுகள்-இப்படியாக லீனாவின் கவிதைகளையும் அவரது ஆளுமையையும் நான் அடையாளப்படுத்தவும் வரையறை செய்வதற்கு முயற்சி செய்யவும் விரும்புகிறேன். லீனா மணிமேகலை, தனது ஆளுமை குறித்தும் தன் கவிதைகளுடனான பிரச்சினைப்பாடுகள் குறித்தும் பேசும் நேர்காணல் நூலான ‘மொழி எனது எதிரி ’   நூலைப் படிக்கும்போது அவர் குறித்து உருவாகும் மனப்பதிவு இது. லீனாவின் கவிதைகளை ஏற்கனவே அவ்வப்போது படித்திருந்தாலும் முழுமையான தொகுதியாகப்     ‘சிச்சிலி ’ யைத் தான் படிக்கிறேன். தமிழ் கவிதைகளில் ஆண் நவீன கவிகள், பெண் நவீன கவிஞர்கள் இருவருக்கும் அதிகம் வாய்க்காத பகடி மற்றும் தீவிரபாவத்தைக் கவிழ்க்கும் கேலிப்பண்பு, லீனாவிடம் இயல்பாக அமைந்துள்ளது. அந்த இயல்பைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து லீனா தொடரவேண்டும் தனது படைப்புகளில்.   இந்த இரண்டு புத்தகங்கள் வாயிலாகவும், லீனா என்ற படைப்பு அகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கு மேலும் ஒரு தூண்டிலை இடுகிறேன்.   குழந்தையின் பேதைமையும், எல்லாம் தெரிந்த தன்மையும் மூர்க்கமான சேட்டைக்கார ரெட்ட