Skip to main content

Posts

Showing posts from March, 2015

பூக்களால் ஆன வரலாற்றின் சல்லாத்துணி

    ஷங்கர்ராமசுப்ரமணியன்   வாள்கள்  காகிதங்கள்  துப்பாக்கிகள் எந்திரங்கள்  அந்நியரின் பாதம்படாத  நிலங்கள்   குதிரைகள்  ரயில்கள் விரையும்  புழுதிபடர்ந்த  நெடுஞ்சாலையின்  ஒவ்வொரு நிறுத்தத்திலும்  நாகரிகம் இளைப்பாறுகிறது  அந்தரங்க அறைகளில்.  பூக்கள் வரையப்பட்ட  வரலாற்றின்  சல்லாத்துணி வழியேதான்  உனது முகம் தெரிகிறது  உனது காயத்தையும்  இறுக்கத்தையும்  கண்ணீரையும்  விரக்திப் புன்னகையையும்  அழகாக    அந்த சல்லாத்துணி  காண்பிப்பது துயரம்தான்  அதன் வழியே  உன் வடுக்களேறிய உடலைக் கண்டு  நாக்கைச் சப்பும்  அல்பப் பூனை  எனது காமம்  எனினும்  நானும் சேர்ந்து புனையமுயலும்  கதைகளை நீக்கி  உன்னைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்  நான் உன்னை நேசிக்கிறேன்  இந்தப் புளித்துப் போன வார்த்தைகளால்… ( Once Upon a Time in the West திரைப்படத்தின் நாயகியான  க்ளாடியா கார்டினலுக்கு)