Skip to main content

எனது மதுக்குப்பி

 ஷங்கர்ராமசுப்ரமணியன்


 யுத்தங்களில் நொறுங்கி உடையாமல்
 காலத்தின் பழைமைக்குணம் ஏறாமல்
 கடல்களின் குளிர் தாங்கி
 மிதந்து வந்த
 மதுக்குப்பி
 நுரைத்து நிற்கும்
 என் ஆனந்தம்
 யாருக்கும் இதில்
ஒரு துளியைக் கூட
பகிரவோ 
உரைக்கவோ
என்னால் இயலாது
 என் துக்கம்



Comments