Skip to main content

மிச்சம் உள்ள ஆவி


 ஷங்கர்ராமசுப்ரமணியன்
 திருநெல்வேலி
 டவுணில்
 சந்திப்பிள்ளையார் முக்கின்
 இடதுபுறம்
 உள்ளடங்கி இருக்கும்
 கல்லூர் பிள்ளைக் கடையில்
 பின்னரவில்
 பரிமாறப்படும்
 இட்லியை விள்ளும்போது
 ஆவி இப்போதும் வெளியேறுகிறது
 இட்லியில் ஆவியைப் பார்த்து
 ரொம்ப நாளாகி விட்டது
 ஆவிகள் என்று சொன்னால்
 அர்த்தம் விபரீதமாகி விடும்
 இருந்தும்
 திருநெல்வேலியின்
 ஆவி
 இட்லியில் மிச்சம் இருப்பதாகச்
 சொல்லிக் கொள்ளலாம். 

Comments