Skip to main content

Posts

Showing posts from October, 2013

ஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது

ஆஸ்கர் வைல்டை ரயிலில் இருந்து படித்த போது, ஒரு கூற்றில் என்னை அவன் வெளியே எறிந்துவிட்டான். சூரியகாந்தி வயல்களில் இருந்து கிளிகள் பறந்தெழுந்தன. ஒரு புத்தகம் இப்படித்தான் ஒருவனை வெளியே விரட்டியடிக்க வேண்டும். பல யுகங்களாகப் பார்த்த மரங்கள் தான். அனைத்தும் புதிதாகத் தெரியத் தொடங்குகின்றன. பூக்கள் திருவிழா கோஷம் போடுகின்றன .  இயற்கைக்கு தன்னுணர்வுள்ள அழகோ, நீதியோ, மகிழ்ச்சியோ, முழுமையோ இல்லை. இயற்கைக்கு நான் வேண்டாம். எனக்குத் தான் அவர்கள் வேண்டும். இயற்கையோடு இணைந்து அதை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் நானே மாற்றிக்கொள்கிறேன். அதை மறுபடைப்பு செய்கிறேன். நான்தான், நான் தான் காலம்காலமாக அதை மனிதாயப்படுத்தி என் கவிதையில், என் ஓவியத்தில், சிற்பங்களில், பாடல்களில், கதைகளில் இணைத்து அதற்கு ஒரு முழுமையைத் தருகிறேன்.

ஆயிரம் சந்தோஷ இலைகள்

நான் என் வீட்டு பால்கனியோர அரசமரம் என் மனம் காற்றிலும் ஒளியிலும் ஆடும் ஆயிரம் சந்தோஷ இலைகள்

நான்

என் தந்தையர் எனக்கு வழிவிட்டுப் போயினர். என் வீடும் நிலமும் விசாலம் கொண்டது துளியும் கவலை இன்றி பெயரோடு மகத்துவமும் சூடிய மலர்கள் காவியச்சாயல் ஏறாத புறக்கணிக்கப்பட்ட பூக்கள் மஞ்சளும் சிகப்புமாக குப்பைமேடுகள் சிதில வீடுகள், பாலங்களில் பூத்துச் சிரிக்கின்றன. என் குழந்தைகள் அந்தப் பூக்களைப் போல இந்த உலகை துல்லியமாக விடுதலையுடன் பார்க்க நான் அதே சிரிப்புடன் இங்கிருந்து நீங்கத்தான் வேண்டும்.