Skip to main content

ஆப்பிள் பாபா வாணி


வாணி ஊருக்குப் போயிருந்தாள்
வியாழக்கிழமை இரவன்று
தவறாமல்
சாய்பாபாவுக்கு
ஆப்பிளைப் படைக்கச் சொல்லியிருந்தாள்
நான் அந்த நாள் முழுவதும்
பாபாவையும்
வாணியையும்
ஆப்பிளையும்
நினைவில் வைத்திருந்தேன்
இரவில் வீடு திரும்பி
குளிர்சாதனப் பெட்டியைத்  திறந்தேன்

ஆப்பிளை எடுத்து
பூஜையறையில்
சாய்பாபாவுக்கு
வைத்தேன்.
ஆப்பிள் வியர்ததது
தீபச்சுடர் ஒளியில்
பாபாவின் முகத்தைப் பார்த்தேன்
அவர் முகத்தில் வருத்தம்
எனக்கும்தான்.

Comments