Skip to main content

Posts

Showing posts from August, 2013

நொறுங்கிக் கொண்டேயிருக்கும் காதலன்- அம்பிகாபதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் பஞ்சாபில் நிலவும் துயரக் காதல் கதையான ஹீர்-ராஞ்சாவை, காசியின் களத்தில் வைத்து தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கதைதான் ராஞ்சனா. அதுதான் தமிழில், இன்னொரு காவியக் கதாபாத்திரத்தின் பெயரோடு அம்பிகாபதியாக வெளியாகியுள்ளது. இந்தியில் ராஞ்சனா வெளியாகி நல்ல வர்த்தக வெற்றியையும், தனுஷூக்கு நல்லபெயரையும் பெற்றுத் தந்துள்ளது. ராஞ்சனா ஒருவகையில் இந்தி சினிமா உலகையும், ஆங்கிலப் பத்திரிக்கையுலகையும் ஒருவகை ‘அதிர்ச்சிக்கு ’ உள்ளாக்கியுள்ளதையும் அந்த எழுத்துகளின் வழியில் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னொரு வகையிலும் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. காதல் தவிர வேறெந்த ஈடுபாடுகளும் லட்சியமும் இல்லாமல் தீவிரமான வன்முறையால், வன்முறை வழி அன்பால் காதலியை வென்றெடுக்க முயலும், அதற்காக எல்லா அழிவுகளையும், குரூரங்களையும், நிகழ்த்தும் தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமான நாயகன் இந்திய சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறான். அந்த நாயகனை முழுமையாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அந்த நாயகன் சரியான முறையில் பொருந்தக்கூடிய   உருவாக நடிகர் தனுஷ் ; ஒரே கதாபாத்திரத்தை தமிழில் பல படங்களில் ஏற்