Skip to main content

நான்கு கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

மஞ்சள் ரோஸ்




மஞ்சள் ரோஸ்
என்று
தயங்காமல்
அவளை அழைத்துவிடு
அவள் தானாகவே
ஒரு மஞ்சள் ரோஸ்
ஆகிவிடுவாள்
இல்லையென்றாலும்
கவலை இல்லை
அவளை
ஆக்கிவிடலாம்.

000
நான் சிறையிருக்கிறேன்
ஆனால் 
குரங்குகள் உண்டு
வெளிச்சம் உண்டு
காதல் உண்டு
பாடல்கள்
உண்டு
00000



இவள்
அவள் அல்ல
அவளை நான்
பார்த்த
பொழுது
இவள்
குழந்தையாக
இருந்திருப்பாள்
ஆனால்
இவள்
ஜெயலட்சுமிதான்

000000

மதியவேளை
மெல்ல மயங்குகிறது
இதற்கு முன்பு யாரும்
பார்த்திராத
மயக்கம் அது
நான் பார்க்கிறேன்..
மரம்
ஜன்னல்
இலைகளில்
தெரியும்
பறவைகள்
பார்வைக்கு
முன்பைவிட
துல்லியமடைகின்றன
ரோஜாவின் நிழலில் அல்ல
அரச மரத்து நிழலில்
இருக்கிறது
என் வீடு
000000
(கல்குதிரை-பனிக்கால இதழ்-21)

Comments