Skip to main content

Posts

Showing posts from August, 2012

சிறந்த சமூகவியல் எழுத்துகள் அழகாக எழுதப்பட்டவை தான்- ஆ. இரா. வேங்கடாசலபதி

  காலனிய வரலாற்றாய்வாளர்கள் வட்டத்தில் இந்தியாவிலிருந்து மதிக்கப்படும் பெயர்களில் ஒன்று இவருடையது . பாரதியார் , வஉசி , புதுமைப்பித்தன் ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை உருவாக்கியவர் . நவீன தமிழ் சமூக உருவாக்கம் குறித்து இவர் எழுதிய அந்தக் காலத்தில் காப்பி இல்லை கட்டுரைகள் ஆய்வுநுட்பத்தையும் தாண்டி புனைவு போல வாசிப்பதற்கும் சுவாரசியமானவை . சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது த சன்டே இந்தியனுக்காக எடுத்த நேர்காணல் இது ... 17 வயதிலேயே வ உசியின் கடிதங்களை பதிப்பித்துவிட்டீர்கள் ... பெரிய வாய்ப்புகள் இல்லாததாக கருதப்படும் வரலாற்று ஆய்வில் இத்தனை ஈடுபாடு வருவதற்கான காரணம் என்ன ? ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் சிறுவயதில் இருந்தது . ஆனால் அதை செய்யக்கூடிய எந்தவகை ஆற்றலும் என்னிடம் இல்லை . எதிலும் நான் முதன்மையாக இருந்தது இல்லை . அப்போதுதான் புத்தகவாசிப்பில் ஈடுபாடு வந்தது . ஆங்கிலப்படிப்பில் இருந்து தமிழ்படிப்பின் மேல் காதல் ஏற்பட்டது . நான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால் பாடப்புத்தகங்களில் தமிழகத்தைப் பற்றி ஒரு செய்தியும் இருக்காது

துக்கம் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் கைவிடப்பட்ட வில்வண்டி ஒன்று என் சமீபத்திய நினைவுகளில் காட்சியாக வருகிறது அது சாய்ந்திருக்கும் கிழட்டுப் புளியமரமோ கால்களை விரித்த எலும்புக்கூடாய் தன் வேர்களை வெளிக்காட்டி நிற்கிறது ஏதேதோ காரணங்கள் இருந்திருக்கலாம் அது பயணிக்காமல் நின்றதற்கு . ஆரச்சக்கரங்களின் பெரும்பாதி மணலுக்குள் புதைந்து விட்டது அவை மூடிய நிலத்தின் மீது   புற்கள் தாவரங்கள் முளைத்து விட்டன . பருவமழையால் வண்டியின் மேல்பகுதி பச்சைப்பசேலென பாசிபடர்ந்து மின்னுகிறது வண்டிக்குக் கீழே உலர்ந்த சேறுபடிந்து தரையில் பதிந்துள்ளது ஒரு அரிக்கேன் விளக்கு . தெரியாமையின் இருள்மூடிய இரவுகளில் அந்த விளக்கு ஆடியபடி உரைத்த மர்மங்களை கழற்ற இயலாமல் போனானோ வண்டிக்காரன் .