Skip to main content

Posts

Showing posts from July, 2012

விடியல் சிவா

தமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள

கடலால் எங்களைப் பிரித்த தீவு

கடலால் எங்களைப் பிரித்த தீவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர தொடர பேச்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது . பொதுவாகப் பேசிக்கொள்ள ஏதுமற்ற எங்கள் வெறுமையூரில் , அந்தக் கொலைகளைப் பற்றி ஒரு திருவிழா போல் கூடிகூடிப் பேசினார்கள் . கொலைகளைப் பலகோணங்களில் இருந்தும் ஆராய்ந்து பேச வெளிநாடுகளிலிருந்தும் தாயகம் இறங்கி வந்து சிறிய அரங்குகளில் பேசினார்கள் . பெரிய மேடைகளில் ரத்தம் கொதிக்கப் பேசினார்கள் . பேரணிகளில் பேசினார்கள் . போராட்டங்களில் பேசினார்கள் . அனைவரின் கையாலாகாத்தனங்களையும் மறைப்பதில் ஆரம்பித்த பேச்சு ஒருவர் தரப்பை மற்றவர் புதைப்பதில் முனைப்பானது . பேசிப்பேசி இறந்த உடல்களை ஆழத்துக்குள் புதைத்தபடியே இருந்தனர் . அனைவரும் வேறு வேறு குரல்களில் பேசினார்கள் . பேச்சுகள் புத்தகங்களானது . பேச்சுகள் உடனடியாக விற்றுத்தீர்ந்தது . பேச்சுகள் திட்டநிரல்கள் ஆனது . ஆணும் பெண்ணும் ஊடல் கொள்வது போல் பேசிப்பேசி உன்மத்தம் ஏற்றினர் . மரணம் நேரும் புதிரும் , பலவீனமும் ஆன முடிச்சை அவர்கள் உணராமலேயே பேசிக்கொண்டிருந்தனர் . சிலர் இறந்தான் என்றனர் . சிலர் இறக்கவில்லை என்றனர் . இரண்டு தரப்பும் கதைகளைச் சந்தைய

விசில்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ரிலீஸ் நாளன்றே சகுனி படத்திற்கு மாயாஜால் போயிருந்தேன் . வெள்ளிக்கிழமை மதியவேளை . படம் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் நானும் நண்பரும் நுழைந்துவிட்டோம் . அழைத்துப்போன நண்பர் அந்தப் பத்துநிமிடங்களைக் கூட மிச்சம் வைக்காமல் உடனடியாக விமானம் பிடித்து குறட்டையில் ஆழ்ந்துவிட்டார் . எங்களுக்குப் பின்வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளம் வந்து அமர்ந்தது . கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகியிருக்காது . உடன் பணிபுரியும் தோழியின் பிறந்தநாள் ட்ரீட்டுக்காக படம்பார்க்க வந்திருக்கிறார்கள் . தோழி , திரையரங்கத்தின் இருட்டிலும் நீலஉலோக நிறச் சேலையில் பளபளவென்று இருந்தார் . படம் போடுவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தது . கலாய்ப்பும் , உற்சாகமுமாக ஒருவரையொருவர் வாரிக்கொண்டிருந்தனர் . வார்த்தை நரி , உயர உயரக் குதித்தது உரையாடலில் . இன்னும் இரண்டு நிமிடங்கள் படம் போட இருந்தது . அது எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும் . அவர்களில் ஒரு பையன் ஒரு விசிலை அடித்தான் . ஒரு நண்பர் , இன்னும் டெம்போ வேணும்டா மாப்பிள என்றார் . இன்னும் சத்தம் கூடியது . என் நண்

நான்

ஷங்கர்ராமசுப்ரமணியன் பம்பரக்கூர்மை பசிய சிறு தென்னங்குரும்பை கையில் தொடும்போது நான் ஏன் சிறுவன் ? கருவேப்பிலை சிறு மரக்கிளை அப்பொழுது தான் வந்தமர்ந்த குயில் ஆடும்போது நான் ஏன் பறவை ?

பெட்டி

அந்த பெட்டிதான் என்னை வீட்டிலிருந்தும் அறைகளிலிருந்தும் துரத்தியதென்பதை நான் முதலில் அறியவில்லை. 18 வயதில் எனது அப்பாவை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய போது என்னுடன் அந்தப் பெட்டியின் பயணம் தொடங்கியது. கல்லூரியிலிருந்து  வெளியேற்றப்பட்ட போது என் அறையிலிருந்த அந்த பெட்டி சாலையில்   தூக்கி எறியப்பட்டது. அதன் பின்பும் நான் அந்தப்பெட்டியுடனேயே அடைக்கலம் தேடி பல்வேறு ஊர்களுக்கிடையே அலைந்திருக்கிறேன். ஒரு இடத்திலும் நிம்மதியாக நீண்டகாலம் நிலைத்திருக்க முடிந்ததில்லை. எனக்கு முன்பாகவே பெட்டி அங்கிருந்து வெளியேறக் காத்திருக்கும் போலும். நான் பெட்டியுடன் வெளியேறும் போதெல்லாம் உடல் வலிக்கும். ஒரு நிராதரவின் சுமையுடன் அப்பெட்டி அகால இரவுகளில் என் கையில் கனத்திருக்கிறது. எனது உடைந்த நினைவுகள் பரிசுகள் நட்புகள் சந்தர்ப்பங்கள் அனைத்தின் சுவடுகளும் கடிதங்களும் புகைப்படங்களும் அந்தப் பெட்டியில் உண்டு. அந்தப் பெட்டியின் மேல்மூடி விளிம்பு தேய்ந்து உடையவும் தொடங்கியிருந்தது. சாலமன் கிரண்டியைப் போல புதன்கிழமை எனக்கு திருமணமானது. வெள்ளிக்கிழமை உறவில் விரிசல் ஏற்பட்டது. திரும்பவும் எனது பெட்டியுடன் வ

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

ஷங்கர்ராமசுப்ரமணியன் (மணல் புத்தகம்,3-  2009 இல் எழுதப்பட்ட தலையங்கம்) புகைப்படம் - சந்தோஷ் நம்பிராஜன் ஜப்பானில் உள்ள நாகாசாகியில் வசித்த பெண் ஒருத்தி , கலை வேலைப்பாடுள்ள நறுமணப் புகைச்சிமிழ்களைத் தயார் செய்வதில் அரிதான திறன் பெற்றவளாய் இருந்தாள் . அவள் பெயர் கமே . ஜப்பானில் தேநீர் சடங்கு நடக்கும் இடங்களிலும் , மடாலயங்களிலும் அவள் தயார் செய்த நறுமணப் புகைச்சிமிழ்கள்தான் அலங்கரித்தன . கமேயின் தந்தை நல்ல ஓவியக்கலைஞர் . அவர் குடிப்பதில் மிகவும் விருப்பமுடையவர் . கமே அவள் தந்தையிடமிருந்து கலையையும் குடியையும் கைவரப் பெற்றிருந்தாள் . கமேக்குச் சிறிது பணம் கிடைத்தால் போதும் . ஓவியக்கலைஞர்கள் , கவிஞர்கள் , பணியாளர்கள் என்று அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து மகிழ்விப்பாள் . ஆண்களுடன் சேர்ந்து கலந்து புகைப்பதிலும் அவளுக்கு விருப்பம் அதிகம் . இந்த விருந்துகளில் இருந்துதான் அவளுக்குப் புதிய வடிவங்கள் பற்றிய கற்பனை பிறக்கும் . கமே தனது படைப்புகளை உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும் . ஆனால் அவள் உருவாக்கும் ஒவ்வொன்றுமே சிறந்த கலைப்படைப்பு ஆகிவிடும் . அவளது நறுமணப் புகைமூ