Skip to main content

Posts

Showing posts from November, 2011

ஆர்.சூடாமணியின் நவீன நீதிக்கதைகள்

சூடாமணியின் தேர்ந்தெடுத்த கதைகளை ஆண்டுவாரியான வரிசையில் படித்துப் பார்க்கும்போது ,  இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் நமது சமூகம் மெதுமெதுவாக நவீனமயமதாலுக்கு உட்பட்டு பழைய மரபுகள் அசமந்தமாக விடைபெறுவதைப் படிப்படியாகக் காணமுடிகிறது .  வீடுகளுக்கும் தெருக்களுக்கும் நடந்த ஆத்மார்த்தமான உரையாடல்கள் என அக்கதைகளை எளிதாகச் சொல்ல முடியும் .  இந்த உரையாடல்களில் மனிதர்கள் மற்றவர்களின் இருப்புக்கு நெகிழ்கிறார்கள் .  இவர் கதைகள் பெரும்பாலும் நடுத்தர ,  கீழ்நடுத்தர வாழ்க்கைப் பின்னணியிலிருந்து எழுதப்பட்டவை .  மிகவும் சன்னமான சம்பிரதாயக் கோட்டை தாண்டவே முடியாதவை .  ஆனால் அசட்டுலட்சியங்கள் பேசாத அறவலுகொண்ட நவீன நீதிக்கதைகள் அவை .  நவீன கல்வி ,  புதிய வாய்ப்புகள் ,  வசதிகள் ,  செய்திப்பரவல் அனைத்தும் பரவலாக உருவாகத் தொடங்கும் நவீனத்துவ காலத்தைச் சேர்ந்தவை சூடாமணி கதைகள் .  வசதிகளும் உணவு உள்ளிட்ட வளங்களும் நாம் இன்று துய்ப்பதுபோல உபரியாக இல்லாத காலநிலை அது . உணவுகள் பற்றாக்குறையாக இருந்த பாத்திரங்களின் மிச்ச இடத்தை ,  புதிய மதிப்பீடுகளும் புதிய உலகக் கனவுகளும் நிறைத்திருப்பதை உணரமுடிகிறது . முதல் த

சாதாரணர் சதுக்கங்கள்

இந்த பூமியில் மனிதவாழ்க்கை என்பது ஆன்மீகரீதியாக கருப்பருவத்திலேயே உள்ளது. எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை. மனிதன் இந்த கிரகத்தைவிட்டு நீங்கும்போதுதான் பிறக்கிறான். நமது ஆன்மாதான் மெய்யான உடல். உடல் என்பது வெறுமனே துணிகள்தான் -  முகமது அப்சல் குரு விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் நடந்த மாற்றங்களை ஐதராபாத் மற்றும் சென்னை என்ற இருபெருநகர்களைக் கதைக்களமாக வைத்து தனது   கதைகளை எழுதியவர் அசோகமித்திரன்.   பல கலாசாரப் பண்புகளை உட்கொண்ட பெருநகரத்து((காஸ்மாபொலிட்டன்)   தமிழ் எழுத்தாளர் அவர். புராணிக மொழியும்,கவித்துவமும், சமத்காரமும், வாய்மொழி மரபின் அம்சங்களும் கொண்ட தமிழ் சிறுகதைப் போக்கிலிருந்து விலகி எளிய, சாரமற்றது போன்று தோன்றக்கூடிய உரைநடையில் எழுதியவர் . அவரது கதைகளை க் கொஞ்சம் நுட்பமாக படிப்பவர்கள், அந்த எளிமை ஒரு தோற்றம்தான் என்பதை உணர்வார்கள். ஒரு கதையின் ஒட்டுமொத்தத் திறப்பும் அவரது குறுகத் தரித்த வாக்கியம் ஒன்றில் நிலக்கண்ணி வெடி போல புதைந்திருக்கும். கூர்மையான அவதானிப்புகள், எள்ளல், விமர்சனம் ஆகியவைகளை மௌனமாக கதைகளுக்குள் சிறு தானியங்களாகத் தெளிப்பவர் அசோகமித்திரன்.   200க்